கொல்லிமலை சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளதாவது : “நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காகவும், கொல்லிமலைக்கு பயணிகளை அதிக அளவில் கவர்ந்திழுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.5 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள 2008 - 09 ம் ஆண்டில் மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலை பகுதியில் சுற்றுப்புறங்களை மேம்பாடு செய்தல், இயற்கை காட்சிகள் மேம்பாடு செய்தல், பூங்கா மேம்பாடு, தடுப்புச்சுவர்கள் கட்டுதல், சுற்றுலா தலங்களுக்கு மின் விளக்கு வசதி செய்தல் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, திடக்கழிவு நீர் மேலாண்மை செய்தல், சுற்றுலா தொடர்பாக அமைக்கப்படும் Read the full story
Popularity: 59% [?]






